Tamil News large 252415620200420041947
இலங்கைசெய்திகள்

அரிசி பதுக்கி வைத்த களஞ்சியசாலைகளுக்கு ‘சீல்’!!

Share

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தலைமையிலான குழுவால் நேற்றுமுன்தினம் (25) சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, பொலநறுவை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட நெல் களஞ்சியசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட சுமார் 20 களஞ்சியசாலைகள் இன்று சுற்றிவளைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

சவளக்கடை பகுதியிலுள்ள பாரிய நெல் களஞ்சியசாலையொன்றும் இதில் அடங்குகின்றது.

பியர் உற்பத்திக்காக சுமார் 30 லட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட சுற்றிவளைப்பு குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...