24 668aae2e0fddd 14
இலங்கைசெய்திகள்

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

Share

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் தொடருந்தில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது, இன்று (07) இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் 17 வயதுடையவர்கள் என்றும் அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான மாணவன், மாணவி, அம்பலாங்கொடையில் ஹிரேவத்த மற்றும் தெல்துவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மாணவி படுகாயத்துக்குள்ளாகியுள்ளதுடன், மாணவன் சிறிய கீறல் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொடருந்து மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான பாடசாலை மாணவி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் சுயநினைவின்றி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...