பேருந்தில் பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்நத விபரீதம்!
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்நத விபரீதம்!

Share

பேருந்தில் பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்நத விபரீதம்!

பேருந்தில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து கந்தானை நோக்கி சென்ற பயணிகள் போக்குவரத்து பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவியை, விசேட அதிரடிப்படை அதிகாரி, முன்னாள் கடற்படை சிப்பாய் ஒசேர்ந்த இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய் களுபோவில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை சிப்பாய் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சந்தேகநபர்களை நேற்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜா-அல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...