tamilni 329 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி

Share

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி

திவுலபிட்டிய உள்ளூராட்சி சபையின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி ஐந்து நாட்களாக தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், பல்லேவெல பொலிஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவன் கடந்த 11ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

மீரிகம பதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மீரிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கியமை தொடர்பில் குறித்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பல்லேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...