vvv
இலங்கைசெய்திகள்

ஒக்டோபரில் பாடசாலை ஆரம்பம் – டிசெம்பர் விடுமுறை இல்லை

Share

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்டதன்பின் ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமை போன்று டிசெம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இந்த முறை வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளை 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.

நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 5,131 பாடசாலைகள் உள்ளன எனவும் அவற்றில் தரம் 1–5 வரையான வகுப்புக்கள் உள்ள பாடசாலைகள் 3884 எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் தரம் 1–5 வரையான வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...