டிசெம்பர் 18ஆம் திகதியன்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை உரிய நேரத்தில் மதிப்பீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை (18) நாடு முழுவதும் 2,894 பரீட்சை நிலையங்களில் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்ட பரீட்சையில் 334,698 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment