3 39
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரின் விசேட நடவடிக்கை

Share

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரின் விசேட நடவடிக்கை

புலமைப்பரிசில் கசிவு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

சுதந்திரமான நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் பணித்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியின் மேம்பாடு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...