இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்!

24 660c139ab5fd6

இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்றையதினம் (02-04-2024) முதல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை 3,420 ரூபா என்ற சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபா என்ற சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

Exit mobile version