WhatsApp Image 2023 01 29 at 10.08.27 PM e1675010478603
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கத்தானை விபத்தில் குடும்பஸ்தர் பலி!!!!

Share

சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ( சாவகச்சேரி இந்து கல்லூரி அருகாமையில்) இன்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நகரில் இருந்து சங்கத்தானை நோக்கி மோட்டார் வண்டியில் வருகை தந்த குறித்த நபர், A9 வீதியின் வலது பக்கமாக திரும்ப முற்பட்ட வேளையில் அவரின் பின்னால் வந்த மோட்டார் வண்டி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறித்த நபர் அங்கு நின்ற இளைஞர்களால் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சங்கத்தானை,சாவகச்சேரியை சேர்ந்த சண்முகலிங்கம் பிரதாப் (வதனி ஜூவலரி கொடிகாமம் உரிமையாளர் மகன்) என்பவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் சிறிய காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 01 29 at 6.59.01 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...