image ea37ed4f42
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமுர்த்தி அபிவிருத்தி சந்தைகள் ஆரம்பம்!!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகங்களில்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தைகள் திங்கட்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

துணுக்காய்,மாந்தை கிழக்கு,ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலகங்களில் சமுர்த்தி பயனாளிகளின்  உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கிலான சந்தைகளே ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் அபிமானி  விற்பனை  சந்தையினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆரம்பித்துவைத்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் க.விமலநாதன் மற்றும் மாவட்ட சமூர்த்தித்திணைக்கள பணிப்பாளர் மற்றம் பிரதே செயலாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான விளையாட்டுப்போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் கலந்துகொண்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் சான்றிதழும்,நினைவுச்சின்னமும் மாவட்டஅரசாங்க அதிபரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...