20 16
இலங்கைசெய்திகள்

அனுமதி வழங்குவதற்கு முன்னரே விநியோகிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: நாடாளுமன்றில் தகவல்

Share

அனுமதி வழங்குவதற்கு முன்னரே விநியோகிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: நாடாளுமன்றில் தகவல்

உரிமம் வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே சுமார் 90 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(21) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை, வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நான்கு மாதங்களாகியும் அதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலைமை இருந்தபோதிலும் சுமார் 90 மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 90 மதுபான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை.

இதற்கிடையில், மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து வசூலிக்காத வரியை வசூலிக்க, மதுவரி திணைக்களத்திற்கு நிதியமைச்சகம் ஆலோசனை வழங்கவில்லை என, வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, டபிள்யூ.எம்.மென்டிஸ் மற்றும் நிறுவனம் 3,447, 109, 832.59 ரூபாய்களையும், வயம்ப டிஸ்டில்லரீஸ் /ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ் ரூ. 500,723, 437 ரூபாய்களையும் மெக்கல்லம் ப்ரூவரிஸ் 619, 964,802 ருபாய்களையும், களுத்துறை கூட்டுறவு டிஸ்டில்லரீஸ் 17, 878, 752 ருபாய்களையும் செலுத்த தவறியுள்ளன.

இதில் வயம்ப டிஸ்டில்லரீஸ் நிறுவனம் மட்டும், தவறிய வரிகளை செலுத்துவதை தடுக்கும் உத்தரவை நீதிமன்றத்திடம் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், மதுவரி திணைக்களம் இந்த வருடத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது” என ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...