சமிந்த
அரசியல்இலங்கைசெய்திகள்

சமிந்தவின் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை வேண்டும்! – சஜித் வலியுறுத்து

Share

சமிந்த லக்சானின் மரணம் ஒரு கொலை எனவும், மேலும் அது ஒரு குற்றவியல் சார்ந்த குற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தமது வீட்டுத் தேவைக்காக எண்ணெய் பெற்றுக்கொள்ள வந்த சமிந்தவை கொடூரமாகக் கொலை செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசின் அடக்குமுறை சார்ந்த நடவடிக்கைகளால் ரம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகிப் பலியாகிய இரு பிள்ளைகளின் தந்தையாரான கரந்தகஸ்தென்ன – நாரம்பந்த பிரதேசத்தில் வசித்து வந்த சமிந்த லக்சானின் வீட்டுக்கு இன்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தனது கணவரின் மரணத்தால் துயரடைந்துள்ள சமிந்த லக்சானின் அன்பு மனைவி மற்றும் அவருடைய இரு பிள்ளைகளுடன் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குடும்பத்தின் அத்தியாவசிய எதிர்காலச் செயற்பாடுகளுக்காக நிதி உதவி வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர், தேவைப்படும் எந்நேரத்திலும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர்களுக்காக முன்நிற்பதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...