இலங்கை வந்தடைந்தார் சமந்தா!

samantha

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ளார்.

இவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா நீடித்த ஆதரவை வழங்குவதுடன், உணவுப் பாதுகாப்பு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்தியத்தில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரின் தாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்.

Exit mobile version