images 2 1
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு! சகோதரர் மனோகரன் தகவல்

Share

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு! சகோதரர் மனோகரன் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முதல்முறையாக வீரவணக்க நிகழ்வை டென்மார்க்கில் நடத்தவுள்ளதாக அவரது சகோதரன் வேலுப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் அதாவது 2009, மே 18இல் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்தது.

இந்த நிலையில் பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18ஆம் திகதி நடத்த உள்ளோம்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 3
செய்திகள்உலகம்

ஈரானின் அதிரடி பதிலடித் தாக்குதல்கள்: அண்டை நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான்...

02 2
உலகம்செய்திகள்

பெய்ரூட் மற்றும் டெஹ்ரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்...

01 2
உலகம்செய்திகள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திய கத்தார்: வான்வழித் தாக்குதல்களால் ராஜதந்திர உறவில் விரிசல்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில், ஈரானுடன் தற்போது எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை...

25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...