23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

Share

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25 ) குறித்த சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்புகளின் தரச் சான்றிதழ்களை ஆய்வு செய்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக, 100க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்திலிருந்து தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உப்பு கொள்கலன்கள் அனுப்பப்படுவதாகவும், உப்பு அதன் தரச்சான்றிதழ்கள் போன்றவற்றைச் சரிபார்த்த பிறகு சேமிப்பு வளாகங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்! | Salt Import Sri Lanka

அதேவேளை, கடுமையான வெப்பம் உப்பு உருகுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், சில கொள்கலன்களில் இருந்து உப்பு உருகி வெளியேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உப்பு மட்டுமல்ல, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றையும் கொண்ட கொள்கலன்களை ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், அவை விரயமாகும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில உணவுப் பொருட்கள் குளிர்சாதன பெட்டி கொள்கலன்களில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், அந்தக் கொள்கலன்கள் துறைமுக வளாகத்தில் சுமார் இரண்டு நாட்கள் இருக்கும்போது, ​​கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் என்றும் சனத் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறை உணவுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்திருந்தாலும், துறைமுகத்திற்கு வெளியே உள்ள கொள்கலன் ஆய்வுப் புள்ளிகளில் போதுமான இடவசதி மற்றும் போதுமான அதிகாரிகள் இல்லாததால் கொள்கலன்கள் துறைமுக வளாகத்திற்குள் சிக்கிக் கொள்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...