18 19
இலங்கைசெய்திகள்

சம்பள அதிகரிப்பு, மானியங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

Share

சம்பள அதிகரிப்பு, மானியங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் மானியங்கள் தற்போதைக்கு வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்புக்களும், மானியங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னரே வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட திடீர் சம்பள அதிகரிப்புக்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னர் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட மானியங்கள் நிவாரணங்களையும் தற்போதைக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க முடியும் எனவும், எனினும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி வரையில் அவற்றை நடைமுறைபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் நீண்ட கால அடிப்படையில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு தடையில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...

08 4
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை அருகே மற்றொரு ஈரானிய கப்பல்: மனிதாபிமான அடிப்படையில் அனுமதி கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நிலைகொண்டுள்ள இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr என...