19 18
இலங்கைசெய்திகள்

குரங்கம்மை நோயை கண்டுபிடிக்க விசேட திட்டம்!

Share

குரங்கம்மை நோயை கண்டுபிடிக்க விசேட திட்டம்!

நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகையை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் டாக்டர் பாலித மஹிபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு நோயாளிகள் பதிவானால் அவர்களுக்கு கொழும்பு தொற்று நோய் ஆய்வு பிரிவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்பய்பட்டுள்ளதாக டாக்டர் மஹிபால தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்றாளியின் காயத்தை தொடுவதன் மூலமோ நீண்ட காலமாக நோய்த் தொற்றாளியின் சுவாசிக்கும் காற்றை சுவாசிக்க நேரிட்டாலோ இந்த நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த நோய்த் தொற்று வேகமாக பரவக்கூடிய அபாயம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தொற்று நோயாளியின் படுக்கை விரிப்பு மற்றும் ஆடைகள் ஊடாகவும் இந்த நோய்த் தொற்று பரவக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோயாளிகளிடம் காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளை காண முடியும் என அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...