29 9
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு : தீர்மானத்துக்காக வருந்தவில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு

Share

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு : தீர்மானத்துக்காக வருந்தவில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), எனினும் தாம் மேற்கொண்ட இந்த தீர்மானத்திற்காக வருந்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கும் இந்த காலம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், குறித்த தீர்மானம் தொடர்பில் தாம் வருத்தமடையவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் அப்போதைய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இந்த கருத்து வெளியாகியுள்ளது.

வாக்களிக்கும் உரிமை மற்றும் வாழும் உரிமை ஆகிய இரண்டிற்கும் தனது மரியாதையை ஜனாதிபதி, இதில் வலியுறுத்தியுள்ளார்.

புதிய மக்கள் முன்னணியின் (NPF) தேசிய மாநாட்டில், நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கியிருந்தால், பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்திருக்க முடியாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...