vacancy 5678758
இலங்கைசெய்திகள்

பணிக்கு செல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் !

Share

பணிக்கு செல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் !

பணிக்கு செல்லாத அரச ஊழியர்கள் பலர் சம்பளம் பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாத காலமாக ஒரு நாள் கூட பணிக்கு செல்லாத பெருமளவு அரச ஊழியர்கள் மற்றும் ஒரு வருட காலத்துக்கும் மேல் ஒருநாள் கூட பாடசாலைக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், உயர் அதிகாரிகள் சில மணிநேரம் மாத்திரமே கடமைக்கு வந்து போக்குவரத்து மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை பெறுகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் அலுவலகங்களில் 2, 3 மணித்தியாலங்கள் மாத்திரமே கடமையில் இருந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் தமது பணியாளர்களின் கடமை நேரத்துக்கு மாத்திரமே ஊதியம் வழங்குகின்றது.

மேலும் சில நிறுவனங்கள் எவ்வித கொடுப்பனவும் வழங்காது அடிப்படை ஊதியத்தை வழங்கி வருகின்றன எனவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...