“ சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தகவல் வெளியிட்டார்.
“ நிதி அமைச்சர் பதவியை பெறுவதற்காக ஹர்டி டி சில்வா ஆட்டோவில் பயணிக்கின்றார். வீதிகளில் நடமாடுகின்றார். எதிரணி ஆட்சியைப் பிடிப்பதென்பது பகல் கனவாகும்.
சஜித் அணியில் உள்ள 10 பேர் ரணிலுடன் பேச்சு நடத்துகின்றனர். இன்னும் இரு வாரங்களில் ரணில் பக்கம் சென்றுவிடுவார்கள்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
#SriLankaNews
Leave a comment