குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் - சஜித் கடும் கண்டனம்
இலங்கைசெய்திகள்

குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம்

Share

குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம்

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவே மக்கள் மிகுந்த குழப்ப நிலைக்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு மூலம் என்ன நடக்கும் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது ஜனாதிபதியின் கடமை எனவும், மக்களுக்கு தகவல்களை மறைப்பதன் மூலம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படலாம்.

அரசாங்கம் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.

ஆனாலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு முறையான விளக்கமளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டு வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை.

முறையான கணக்கெடுப்பை நடத்தாமல் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார்.

இதனால் இன்று இத்திட்டம் நாட்டிற்கு பெரும் தலையிடியாக மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...