குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் - சஜித் கடும் கண்டனம்
இலங்கைசெய்திகள்

குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம்

Share

குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம்

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவே மக்கள் மிகுந்த குழப்ப நிலைக்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு மூலம் என்ன நடக்கும் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது ஜனாதிபதியின் கடமை எனவும், மக்களுக்கு தகவல்களை மறைப்பதன் மூலம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படலாம்.

அரசாங்கம் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.

ஆனாலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு முறையான விளக்கமளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டு வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை.

முறையான கணக்கெடுப்பை நடத்தாமல் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார்.

இதனால் இன்று இத்திட்டம் நாட்டிற்கு பெரும் தலையிடியாக மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...