3 14
இலங்கைசெய்திகள்

சஜித்திற்கு உயிர் அச்சுறுத்தலா! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

சஜித்திற்கு உயிர் அச்சுறுத்தலா! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையின் அடிப்படையில் சஜித்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி நிசத் விஜேகுணவர்தன ஆகியோர் இந்த கோரிக்கையை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து தகவல் கிடைக்கப் பெற்ற போதும் சிலர் இவ்வாறு கூறியிருந்ததாக லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கடிதங்கள் அனுப்பி வைத்த போதிலும் பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் குஜராட்டில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர்களின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு காணப்படும் ஆபத்து குறித்து தெரியவந்துள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...