18 18
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் தமது கட்சியும் பேச்சு நடத்தமுடியும்: சஜித் விளக்கம்

Share

சர்வதேச நாணய நிதியத்துடன் தமது கட்சியும் பேச்சு நடத்தமுடியும்: சஜித் விளக்கம்

தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் செய்யத் தவறிய விடயங்கள் தொடர்பில், இந்த பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பொரளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச, எதிரணியில் இருந்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, ஐக்கிய மக்கள் சக்தி பல புரிந்துணர்வுகளை எட்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

2028 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கை போராடி வருகிறது.

இந்தநிலையில், பொருளாதார நிலைமை சவாலானதாக உள்ளது என்றும், வலுவான பொருளாதார வளர்ச்சி மூலோபாயம் தேவை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...