tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

தந்தையானாரா சஜித்…!

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாச தம்பதியினர் குழந்தைச் செல்வமொன்றை பெற்றெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த சமிந்த விஜேசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் சஜித் பிரேமதாச, மாலை வேளையில் சீக்கிரமே வீடு சென்று விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைச் செல்வத்துடன் கொஞ்சி விளையாடும் நோக்கில் அவர் வீடு செல்வதாக சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் வீதியில் இருக்கும் பிள்ளைகளை அள்ளி முத்தமிட்ட போதிலும் அவர்களுக்கு நலன்களை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாச நாட்டின் பிள்ளைகளுக்கு தந்தையாக முடியும் என்பதனை நிரூபித்து, குழந்தைச் செல்வத்திற்கு தந்தையாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி துறப்பு குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு பிள்ளைச் செல்வம் கிடையாது என்பது அரசியல் மேடைகளில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தை பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தனர்.

சஜித் மற்றும் ஜலனி தம்பதியினருக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தமை தொடர்பில் அவர்களது தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...