tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

தந்தையானாரா சஜித்…!

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாச தம்பதியினர் குழந்தைச் செல்வமொன்றை பெற்றெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த சமிந்த விஜேசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் சஜித் பிரேமதாச, மாலை வேளையில் சீக்கிரமே வீடு சென்று விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைச் செல்வத்துடன் கொஞ்சி விளையாடும் நோக்கில் அவர் வீடு செல்வதாக சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் வீதியில் இருக்கும் பிள்ளைகளை அள்ளி முத்தமிட்ட போதிலும் அவர்களுக்கு நலன்களை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாச நாட்டின் பிள்ளைகளுக்கு தந்தையாக முடியும் என்பதனை நிரூபித்து, குழந்தைச் செல்வத்திற்கு தந்தையாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி துறப்பு குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு பிள்ளைச் செல்வம் கிடையாது என்பது அரசியல் மேடைகளில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தை பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தனர்.

சஜித் மற்றும் ஜலனி தம்பதியினருக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தமை தொடர்பில் அவர்களது தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...