tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

தந்தையானாரா சஜித்…!

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாச தம்பதியினர் குழந்தைச் செல்வமொன்றை பெற்றெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த சமிந்த விஜேசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் சஜித் பிரேமதாச, மாலை வேளையில் சீக்கிரமே வீடு சென்று விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைச் செல்வத்துடன் கொஞ்சி விளையாடும் நோக்கில் அவர் வீடு செல்வதாக சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் வீதியில் இருக்கும் பிள்ளைகளை அள்ளி முத்தமிட்ட போதிலும் அவர்களுக்கு நலன்களை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாச நாட்டின் பிள்ளைகளுக்கு தந்தையாக முடியும் என்பதனை நிரூபித்து, குழந்தைச் செல்வத்திற்கு தந்தையாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி துறப்பு குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு பிள்ளைச் செல்வம் கிடையாது என்பது அரசியல் மேடைகளில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தை பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தனர்.

சஜித் மற்றும் ஜலனி தம்பதியினருக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தமை தொடர்பில் அவர்களது தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...