21
இலங்கைசெய்திகள்

ஊடகங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க முயற்சிப்பதாக சஜித் குற்றச்சாட்டு

Share

ஊடகங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க முயற்சிப்பதாக சஜித் குற்றச்சாட்டு

இலங்கையின் ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.

அத்துடன், ஊடக செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியை கைவிடுமாறு அவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது ஊடக சுதந்திரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றி பேசிய அநுரகுமார திசாநாயக்க, தற்போது ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்க முயற்சிப்பதாக பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நாட்டின் ஊடகங்கள் ஜனாதிபதியிடமோ அல்லது எந்த அரசியல்வாதியிடமிருந்தும் ஆலோசனை பெறத் தேவையில்லை.

இந்தநிலையில், ஒரு ஜனநாயக நாட்டின் தூணாக இருக்கும் ஊடக சுதந்திரத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...