11 7
இலங்கைசெய்திகள்

விசேட தேவை கொண்டவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ள சஜித்தின் 3 வீதக்கொள்கை

Share

விசேட தேவை கொண்டவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ள சஜித்தின் 3 வீதக்கொள்கை

ஐக்கிய மக்கள் சக்தி (SJB), கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட தேவை கொண்ட சமூகத்தை வலுவூட்டுவதற்கான தனது கொள்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 1.6 மில்லியன் அங்கவீனமுற்ற பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) இதன்போது அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஒரு விரிவான தேசிய கொள்கையின் அவசியத்தை வலியுறுத்திய பிரேமதாச, விசேட தேவையுடையவர்களுக்கு 3வீத வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தவும், கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அத்தியாவசிய உபகரணங்களுக்கான வரிகளை நீக்கவும் உறுதியளித்துள்ளார்.

அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களுடன், காப்புறுதி தொகை மற்றும் வங்கிக் கடன்களுக்கான அணுகலை எளிதாக்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...