download 15 1 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊடக சுதந்திர அச்சுறுத்தலுக்கு சைவ மகா சபை கண்டணம்!

Share
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடும் வகையில் ஓர் கிறிஸ்தவ மத குழுவினர் உதயன் பத்திரிகை நிறுவனத்தில் மேற்கொண்ட அடாவடிகளை வன்மையாக சைவ மகா சபை கண்டித்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சந்தித்து வரும் மத மாற்றக் குழுக்கள் உண்மையை வெளிப்படுத்தியதற்காக பாதிக்கப்பட்ட மக்களிற்கு நியாயம் கிடைப்பதற்கு வழிகோலும் வகையில் செய்தியை பிரசுரித்தமைக்கு ஊடகத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயன்ற செயலானது மிலேச்சத்தனமானது

கடந்த காலங்களில் தமிழ் தேசிய பற்றுதிக்காக அது சார்ந்த உண்மைச் செய்திகளை வெளியிட்டமைக்காக பலமுறை தாக்கப்பட்ட மிக துயரமான சம்பவங்களை இந்த ஊடகம் சந்தித்திருந்தது

அந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட வலியை விட தற்போது மண்ணின் மக்கள் சார்ந்த மனிதநேய செய்திக்காய் புதிதாய் சொந்த மண்ணில் முளைக்கும் குழுக்களால் அச்சுறுத்தப்படுவது மிகுந்த துயரத்தை தருகின்றது.

இவ்வாறான குழுக்கள் சமூக அமைதி மத நல்லிணக்கத்திற்கு மட்டுமன்றி ஊடக சுதந்திரத்திற்குமே பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது இன்று நிதர்சனமாகி உள்ளது.

உடனடியாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து மரபார்ந்த சமய தலைவர்களும் இவ்வாறான மதக்குழுக்களின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்து சமூக நீதியையும் மதத்தின் பெயரால் நடைபெறும் அநீதியையும் தடுத்து பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கவும் வேண்டி நிற்கின்றோம் – என்றுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...