16 21
இலங்கைசெய்திகள்

இனவாதத்தால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குபற்றாத அநுர.. சபா குகதாஸ் குற்றச்சாட்டு

Share

உண்மையாக ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இனவாதமற்ற ஒரு அரசாங்கமாக இருந்தால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எவ்வாறு யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கெடுத்தாரோ அதே போல முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுத்திருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு விடயத்தை அவர் தெளிவாக செல்லியுள்ளார்.

அதாவது தற்போது வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மேலெழுந்து வருவதாகவும், அது ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலும், நாட்டை குழப்பும் நோக்கிலும் தான் அது செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அவர் பங்கெடுத்துவிட்டு யுத்த வெற்றி நிகழ்வில் பங்கெடுத்திருந்தால் இனவாதம் இல்லாது, பக்கச் சார்பு இல்லாது தனது முன்னகர்வை கொண்டு செல்கின்றார் என நாங்கள் நம்ப முடியும்.

ஆனால் அவர் அவ்வாறு அல்ல. அதாவது இந்த கோர யுத்ததில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோரின் உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் விட்டு கதறுகின்ற போது அவை எவற்றையும் கண்டு கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் கூறாமல், வெறுமனே யுத்த வெற்றி நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு, வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மேலெழுந்துவிட்டதாக சொல்வது வேதனையான விடயம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஜனாதிபதி என்ற வகையில் என்ன செய்யப்போகின்றார் என்பதையும் தெளிவாக சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் விவகாரத்தில் ஒரு காத்திரமான முடிவு சொல்வதில் அவர் தெளிவாக இல்லை.

தானும் ஒரு பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் தான் அவர் கருத்துரைக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம் தொடர்பாக எவ்வாறு நீதி வழங்கவுள்ளீர்கள் என வினவிய வேளை, தன்னுடைய சகோதரனும் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், தானும் அந்த வலியையும் வேதனையையும் உணர்வதாக கூறியுள்ளார்.

அவர் ஜனாதிபதியாக வருவதற்கு முதல் இவ்வாறு கதைப்பது ஏற்புடையதா இருக்கும். ஆனால் ஜனாதிபதியாக வந்த பின்னர் எப்படியான நீதியை வழங்குவேன் என அவர் சொல்லியிருக்க வேண்டும்.

நாட்டில் அமைதி ஏற்படவில்லை என்றால் அந்த அமைதிக்கு தடையான காரணிகள் என்ன் என்பதை கண்டறிந்து, அதற்கு எவ்வாறு தீர்வு வழங்க வேண்டும் என்பதனை ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி இதுவரை அவ்வாறான முடிவுக்கு துணிச்சலாக இறங்கி வரவில்லை” என அவர் குற்றம்சாட்டினார்.

Share
தொடர்புடையது
25 68308d9c71c6a
இலங்கைசெய்திகள்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்...

25 68308f63a7a09
இலங்கைசெய்திகள்

ஏழு வயது சிறுமியை தவறான செயலுக்கு உட்படுத்திய முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...

25 683094aa5d831
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி...

25 68309c4654a51
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா பேரின் மிகமுக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு

உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான...