17 19
இலங்கைசெய்திகள்

முகநூல் அழுத்தத்தினாலே போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்றார் அநுர : வெளியான தகவல்

Share

முகநூல் ஊடாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் கிடைக்கப் பெற்ற அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் காரணமாக போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரே பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் பங்கேற்காதிருப்பதனை எதிர்த்து பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி இந்த நிகழ்வில் பங்கேற்ற நேரிட்டது என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...