3 3
இலங்கைசெய்திகள்

உயிரிழந்த பல்கலை மாணவன்: பொலிஸ் நிலையத்தில் குவியும் சக மாணவர்கள்

Share

உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சரித் தில்ஷான் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 5 பேர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

குறித்த வாக்குமூலங்களை சமனல ஏரி பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், மாணவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 16 பல்கலைக்கழக மாணவர்களை இன்று(02.05.2025) பொலிஸாரிடம் சரணடையுமாறு கூறப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ உலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்ஷான், கடந்த 29ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாகவே மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இறந்த மாணவனின் உறவினர்கள் புஸ்ஸல்லாவ பொலிஸாரிடமும் முறைப்பாடு அளித்திருந்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...