17 8
இலங்கைசெய்திகள்

தப்பியோடிய சிரிய ஜனாதிபதிக்கு அரசியல் புகலிடம் அளித்தது ரஷ்யா

Share

தப்பியோடிய சிரிய ஜனாதிபதிக்கு அரசியல் புகலிடம் அளித்தது ரஷ்யா

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய தலைவர் மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பு பெற்றதாக ரஷ்ய அரசு ஊடகமான TASS செய்தி சேவை தெரிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் மொஸ்கோவில் இருப்பதாக கிரெம்ளினில் உள்ள ஆதாரத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

ரஷ்யாவின் TASS செய்தி சேவை, அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், மொஸ்கோவிற்கு வந்த பிறகு, மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யாவால் தஞ்சம் அளிக்கப்பட்டதாக கூறியது.

சிரியாவின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஐ.நா.வின் கீழ் நடைபெற வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாகவும் TASS தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு சிரிய(syria) ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறினார் என்று ரஷ்ய(russia) வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “ஜனாதிபதி பஷார் ஆசாத்(Bashar al-Assad’) மற்றும் சிரிய அரபு குடியரசு பிராந்தியத்தில் மோதலில் ஈடுபட்டுவந்த குழுக்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தனது ஜனாதிபதி பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் முடிவினை எடுத்தார்.

அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா பங்கேற்கவில்லை, சிரியாவில் உள்ள ரஷ்ய துருப்புகளும் ரஷ்ய ராணுவ தளங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் உடனடியாக அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரிய ஜனாதிபதி எங்கு சென்றுள்ளார் என்ற விபரம் எதனையும் ரஷ்யா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிரிய ஜனாதிபதி ஆசாத் நாட்டைவிட்டு வெளியேற பயன்படுத்திய விமானம் சுட்டு விழ்த்தப்பட்டிருக்கலாம் அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற ஊகங்கள் வேகமாக பரவி வருகின்றன.

Share
தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...