23 6499a3d0c84b8
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு தொடர் ஆதரவு – ரூமேனியா உறுதியளிப்பு..!

Share

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ரூமேனியா தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் ரூமேனியாவின் வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு 34 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் த்ரைய்ன் லோரன்தியு கிறிஸ்தா( Traian Laurentiu Hristea,) தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று விஜயம் செய்துள்ளது.

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

வெளிவிவகார துணை அமைச்சருடன், வெளிவிவகார அமைச்சின் தியானா தாஸி (Diana Tase) மற்றும் ஆலோசகர் போக்தான் அல்தா ( Bogdan Aldea ) ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் அலரிமாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர், இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் சிறிலங்கா தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்கு ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...