23 6499a3d0c84b8
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு தொடர் ஆதரவு – ரூமேனியா உறுதியளிப்பு..!

Share

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ரூமேனியா தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் ரூமேனியாவின் வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு 34 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் த்ரைய்ன் லோரன்தியு கிறிஸ்தா( Traian Laurentiu Hristea,) தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று விஜயம் செய்துள்ளது.

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

வெளிவிவகார துணை அமைச்சருடன், வெளிவிவகார அமைச்சின் தியானா தாஸி (Diana Tase) மற்றும் ஆலோசகர் போக்தான் அல்தா ( Bogdan Aldea ) ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் அலரிமாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர், இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் சிறிலங்கா தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்கு ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...