ரம்புக்கனை
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரம்புக்கனையில் பொலிஸார் வெறியாட்டம்! – ஒருவர் சாவு- 24 பேர் காயம் – நால்வர் கவலைக்கிடம்

Share

கேகாலை மாவட்டம், ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், பொலிஸார் உட்பட காயமடைந்த மேலும் 24 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மக்களின் கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 24 பேரில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

20220419 191703

போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பதிலுக்குப் போராட்டக்காரர்களும் கல்வீச்சுத் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனைப் பகுதி போர்க்களமாக மாறியது.

இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதில் ஒருவர் பலியாகினார். காயமடைந்த 16 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட காயத்தால்தான் பலியாகினார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“போராட்டக்காரர்களால் ஓட்டோவொன்று கொளுத்தப்பட்டது. சொத்துகளுக்கும் தேசம் விளைவிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் பொலிஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனால் 8 பொலிஸாரும் காயமடைந்தனர்” – என்றார்.

இந்நிலையில், ரம்புக்கனைப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

278630439 4966471090132338 5825020854574240018 n

278843087 4966471100132337 4668273744147016337 n

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...