ரம்புக்கனை
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரம்புக்கனையில் பொலிஸார் வெறியாட்டம்! – ஒருவர் சாவு- 24 பேர் காயம் – நால்வர் கவலைக்கிடம்

Share

கேகாலை மாவட்டம், ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், பொலிஸார் உட்பட காயமடைந்த மேலும் 24 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மக்களின் கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 24 பேரில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

20220419 191703

போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பதிலுக்குப் போராட்டக்காரர்களும் கல்வீச்சுத் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனைப் பகுதி போர்க்களமாக மாறியது.

இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதில் ஒருவர் பலியாகினார். காயமடைந்த 16 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட காயத்தால்தான் பலியாகினார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“போராட்டக்காரர்களால் ஓட்டோவொன்று கொளுத்தப்பட்டது. சொத்துகளுக்கும் தேசம் விளைவிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் பொலிஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனால் 8 பொலிஸாரும் காயமடைந்தனர்” – என்றார்.

இந்நிலையில், ரம்புக்கனைப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

278630439 4966471090132338 5825020854574240018 n

278843087 4966471100132337 4668273744147016337 n

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...