எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் பயணத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

bus 2

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

பஸ்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பிலேயே மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து பஸ்களும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version