தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
பஸ்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பிலேயே மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தனியார் பஸ்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருத்தல் கட்டாயமாகும்.பஸ் ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பஸ்ஸின் நடத்துநரே பொறுப்பாக வேண்டும்.
-
ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிகளை ஏற்றுத்தல் வேண்டும்.
-
அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிகின்றனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.
-
பஸ்களில் யாசகம் பெறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
-
பஸ்ஸில் வெற்றிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பும் நடத்துநரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து பஸ்களும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.