மூன்று நாட்கள் மட்டுமே யாழ். போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள்!

pearl one news Kanapathipillai Mahesan

யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள உடைக்க அறிக்கையில்,

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பெற்றுக்கொள்வதில் உள்ள வரையறைகளால் போக்குவரத்து துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ் மாவட்ட போக்குவரத்து திணைக்களமும் சேவை பெறுநர்களின் தேவை கருதி திங்கள்,செவ்வாய், மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என்பதுடன், குறிப்பிட்ட நாட்களில் சேவை பெறுநர்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version