இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் கொள்ளை!

Jewelry
Share

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிபப் பெண்மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிபப் பெண் இன்றைய தினம் (06) , சிகிச்சையின் நிமித்தம் , “எக்ஸ்ரே” எடுப்பதற்காக சென்ற போது , தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி , தனது கைப்பையினுள் (ஹாண்ட் பாக்) வைத்து சென்றுள்ளார்.

திரும்பி வந்த கைப்பையினை பார்த்த போது, அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை கண்ணுற்று , வைத்திய சாலை நிர்வாகத்திடம் , முறையிட்டுள்ளார்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்திய சாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு , வைத்தியசாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது.

தினமும் வைத்திய சாலைக்கு பெருமளவானோர்  பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால் , சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு , வைத்திய சாலை நிர்வாகம் கோரியுள்ளது..

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...