1 4 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை

Share

மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை

மட்டக்களப்பில் தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் 22 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரில் பேக்கரி ஒன்றினை நடாத்திவரும் வர்த்தகர் ஒருவரின் புகைப்படத்தை, கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றில் மோசடிகும்பல் பதிவிட்டு குறித்த கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பேக்கரி உரிமையாளர் என அடையாளப்படுத்திக்கொண்ட குறித்த கும்பல் அந்த இலக்கத்தின் ஊடாக அவருடைய நண்பர்களை தொடர்புகொண்டு தான் வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடன் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது அவரின் புகைப்படம் பதிவிட்ட போலி இலக்கத்திற்கு 22 ஆயிரம் ரூபாவை நண்பர்கள் அனுப்பியுள்ளார்.

இதன் பின்னர் போலி கையடக்க தொலைபேசி இலக்கம் மூலம் மோசடியாக பணம் கொள்ளையிட்டதை அறிந்து கொண்ட வர்த்தகர் மற்றும் அவரின் நண்பர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த மோசடி கும்பல் தொடர்பான விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்துவருவதுடன் இவ்வாறான மோசடி கும்பல் செயற்பட்டு வருவதாகவும் அவர்களிடம் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...