weather
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் வெப்பநிலை!! – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Share

அதிகரிக்கும் வெப்பநிலை!! – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகலை மாவட்ட மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், அதிக அளவில் இருப்பதைக் காட்டுகிறது.

இந்த நிலையில், பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது..

வீடுகளில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளவும் திணைக்களம் கூறுகிறது.

சிறிய குழந்தைகளை தனியாக வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பெரியவர்களை கேட்டுக் கொள்கிறது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...