ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அதிகரிக்கும் பொருட்களின் விலை
கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டிய காரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பெருமளவு நிதி திரட்டவே பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (19) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உலகச் சந்தையில் கோதுமை மா குறைந்து, கோதுமை தானியங்கள் குறைந்து, டொலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்தச் சாதகத்தை நுகர்வோருக்கு மா நிறுவனங்கள் வழங்குவதில்லை.
ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த மக்களின் பணத்தில் நிதியளிப்பதை நான் அறிவேன்.
எனவே, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒருமித்த கருத்து.
ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பணத்தை கொடுத்தவர்கள் இவர்கள்தான். பிரீமா நிறுவனம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டியதன் காரணமாக அதிக விலைக்கு மாவினை பாவனையாவார்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.
இதற்குப் பதில் அளிப்பது பிரதமருக்கும், அவைத் தலைவருக்கும் கடினம் என்பதை நான் அறிவேன்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பியே அநுர குமார் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
- Anura Kumara Dissanayaka
- breaking news sri lanka
- cricket sri lanka
- Economy of Sri Lanka
- english news
- lk
- lka
- News
- news from sri lanka
- Parliament of Sri Lanka
- Rising Commodity Prices In Sri Lanka
- sirasa news
- sri lanka
- Sri Lanka Economic Crisis
- Sri lanka economy
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- Srilanka Tamil News
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
- tv news
Leave a comment