அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அத்துடன் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 205 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு நாடு ஒரு கிலோகிராம் 215 ரூபாவுக்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment