tamilni 278 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்படும் அரிசியின் விலை

Share

அதிகரிக்கப்படும் அரிசியின் விலை

அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, அரிசி விலை அதிகரிப்பு நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று 2023.08. 21ஆம் திகதி நிலவரப்படி, நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக மொத்தம் 46,904 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தில் 23,286 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,904 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது அதிகளவிலான பயிர் சேதங்கள் உடவளவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.

இதன்படி, இந்தப் பகுதியில் 14,667.5 ஏக்கர் சாகுபடி நிலங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,867 ஆகும் என்றும் விவசாய அமைச்சகம் குறிப்பிடப்படுகின்றது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...