tamilni 278 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்படும் அரிசியின் விலை

Share

அதிகரிக்கப்படும் அரிசியின் விலை

அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, அரிசி விலை அதிகரிப்பு நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று 2023.08. 21ஆம் திகதி நிலவரப்படி, நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக மொத்தம் 46,904 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தில் 23,286 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,904 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது அதிகளவிலான பயிர் சேதங்கள் உடவளவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.

இதன்படி, இந்தப் பகுதியில் 14,667.5 ஏக்கர் சாகுபடி நிலங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,867 ஆகும் என்றும் விவசாய அமைச்சகம் குறிப்பிடப்படுகின்றது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...