tamilni 68 scaled
இலங்கைசெய்திகள்

மதுவரி உரிமக் கட்டணங்களில் திருத்தம்

Share

மதுவரி உரிமக் கட்டணங்களில் திருத்தம்

வருடாந்த மதுவரி உரிமங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை மீண்டும் திருத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

மதுவரி கட்டளைச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட முன்னைய திருத்தங்களுக்கு மதுவரி உரிமதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, மீண்டும் வருடாந்திர மதுவரி உரிமக் கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இரண்டு கோடியே ஐம்பது இலட்சமாக இருந்த வருடாந்த மதுபான உற்பத்தி உரிமக் கட்டணம் 20 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்தின்படி, தொழில்துறையில் நுழைவதற்கு ஒருமுறை வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய திருத்தத்தின் பிரகாரம், மாநகரசபை அதிகார வரம்புகளில் மதுபானங்களை சில்லறை விற்பனை செய்வதற்கான உரிமக் கட்டணம் 15 மில்லியனாக இருந்ததாகவும் புதிய திருத்தத்தின் பிரகாரம் அது 10 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரசபை பகுதிகளுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சமான ஆண்டு உரிமக் கட்டணம் 8 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகளில் மதுபானங்களை சில்லறை விற்பனை செய்வதற்கான உரிமக் கட்டணம் 10 மில்லியன் ரூபாவில் இருந்து 6 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பனை கல் போத்தல் உற்பத்தி செய்வதற்கான அனுமதி பத்திரக் கட்டணம் 05 இலட்சம் ரூபாவாகவும், தேங்காய் கள் போத்தல் உற்பத்தி செய்வதற்கான வருடாந்த 10 மில்லியன் ரூபாய் உரிமக் கட்டணம் 15 இலட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வினிகர் தொழிற்சாலைக் கட்டணம் 25 இலட்சத்தில் இருந்து 05 இலட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு தடவைக்கான கட்டணம் 25 இலட்சமாக திருத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...