weee 626x380 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஓய்வுபெறும் வயதெல்லை: பரிசீலனை செய்யாவிடில் வீண் பிரச்சினை

Share

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீள் பரீசிலனை செய்யப்பட வேண்டும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, இந்த யோசனையை முன்வைத்தார்.

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது கட்டாயமாக்கப்படக்கூடாது. 60 வயதுக்கு மேல் எப்போதும் ஓய்வுபெறலாம் என்ற ஏற்பாடு இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வீண் பிரச்சினை உருவாகும்.

அதேபோல அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்வது கடினம். எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...