2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை நீதவான் திலிண கமகே, இன்று (02) பிறப்பித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நீதவான் விசாரணையை மீண்டும் அழைப்பித்த போதே நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினரால் ரிஷாட் பதியூதீன் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment