mattala
இலங்கைசெய்திகள்

மீண்டும் சர்வதேச சேவைகள் ஆரம்பம்

Share

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஏறக்குறைய இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (29) முதல் சர்வதேச சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்தள விமான நிலைய அட்டவணையின்படி, கடைசியாக 2021 ஆம் ஆண்டு பயணிகள் விமானம் வந்துள்ளது.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான நிலையமாக பயன்படுத்தப்பட்டது.

நாட்டின் வான்வெளிக்கு மேலே பறக்கும் விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்கான விமான நிலையமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.

‘ரெட் விங்ஸ்’ விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ரஷ்யாவில் இருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் 2023 ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு 2 விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

அதனை 3 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...