mattala
இலங்கைசெய்திகள்

மீண்டும் சர்வதேச சேவைகள் ஆரம்பம்

Share

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஏறக்குறைய இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (29) முதல் சர்வதேச சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்தள விமான நிலைய அட்டவணையின்படி, கடைசியாக 2021 ஆம் ஆண்டு பயணிகள் விமானம் வந்துள்ளது.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான நிலையமாக பயன்படுத்தப்பட்டது.

நாட்டின் வான்வெளிக்கு மேலே பறக்கும் விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்கான விமான நிலையமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.

‘ரெட் விங்ஸ்’ விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ரஷ்யாவில் இருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் 2023 ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு 2 விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

அதனை 3 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...