image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

Share

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையுத்தரவு, மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மன்னார் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. அதன்படி, சந்தேகநபர்கள் ஐந்து பேருக்குமான தடையுத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏழு காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காக மண் அகழும் காலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னார் தீவை அண்மித்த பகுதியில் புதிய காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கான மண் பரிசோதனைக்குச் சென்றவர்களுக்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேசாலை காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த நபர்களுக்கு எதிராக முன்னர் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...