closed
இலங்கைசெய்திகள்

உணவகங்கள் முற்றாக மூடப்படும் அபாயம்!!

Share

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின், புதன்கிழமைக்குள் (16) நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எச்சரித்தார்.

முட்டை தட்டுப்பாடு காரணமாக அப்பம், பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி, முட்டை ரோல்ஸ், கேக், புடிங், வட்டிலப்பம் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக அமைச்சு உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பரிவுகளும் உடனடியாக தலையிட்டு முட்டை சங்கங்களுடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இல்லையெனின் பிரச்சினை தீவிரமடையும் என்றார்.

விலையை குறைக்க வேண்டுமானால் குறையுக்குமாறும் அதிகரிக்க வேண்டுமானால் அதிகரிக்குமாறும் தெரிவித்த அவர், ஏதாவது செய்து தமக்கு முட்டை வழங்குமாறும், இல்லையெனில் ஹோட்டல் தொழில் தொடர முடியாது என்றும் குறிப்பிட்டார்.

முட்டை தட்டுப்பாட்டினால் கேக் உற்பத்தி போன்ற வீட்டு கைத் தொழில்களும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 5
செய்திகள்இலங்கை

இலங்கை – நேபாளம் இடையே புதிய விசா விலக்கு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி!

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,...

22 8
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

21 8
செய்திகள்அரசியல்இலங்கை

யூ.எல். 1213 விமானச் சேவை குறித்த குற்றச்சாட்டை மறுத்தது அரசாங்கம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் விளக்கம்

கடந்த மார்ச் 9-ஆம் திகதி ரோமிற்குச் சென்ற யூ.எல். 1213 (UL 1213) விமானம், அமைச்சர்...

20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...