செய்திகள்அரசியல்இலங்கை

பதவி விலகுகிறார் பி.பீ. ஜயசுந்தர

Share
P.B. Jayasundera
Share

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, 2022 பெப்ரவரி முதலாம் திகதி முதல் நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளாரென அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பிபீ ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ள அவர், இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்று, புதிய செயலாளரை நியமிக்கும்வரை பிபீ ஜயசுந்தர பதவியில் நீடிப்பார்.

அதன்பின்னர் அவர் நிதி அமைச்சுக்கு செல்லவுள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் அவருக்கு சிரேஷ்ட ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பிபீ ஜயசுந்தர, திறைசேரி செயலாளராக செயற்பட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...